சென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது. தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வீட்டிலேயே முடங்கி இருந்த சமந்தா, அவரது கணவர் நாகசைதன்யாவுடன் பைக்கில் வெளியில் சென்றதை புகைப்படம் எடுத்து பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படத்தை 15 லட்சம் பேருக்கு மேல் லைக் செய்திருப்பது ஆச்சரியம்.