தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி, விரைவில் வெளியாக இருக்கும் ‘அகிலன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘துரோகம் பண்ணு..’ என தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும், காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
‘பூலோகம்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘அகிலன்’.
இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் நடிகை தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் பெராடி, ஹரிஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதன் ராவ் ஆகியோருடன் ‘காப்பான்’ படப்புகழ் நடிகர் ஸிராக் ஜேனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் எனும் பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் மார்ச் மாதம் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பொறக்கும் போதும் துரோகம் பண்ணு.. இறக்கும் போதும் துரோகம் பண்ணு. இருக்கும் போதும் துரோகம் பண்ணு..’ எனத் தொடங்கும் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, இசையமைப்பாளரும், பாடகுருமான சாம் சி எஸ், சிவம் எனும் பாடகருடன் இணைந்து பாடியிருக்கிறார். தத்துவமும், உணர்வும் இணைந்து உருவாகி இருக்கும் இந்த பாடல், அதன் வேகமான தாள லயத்தால் இளைய தலைமுறை ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது.