‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்து வரும் புதிய படத்திற்கு ‘மஹாராஜா’ எனும் தலைப்பு சூட்டப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
‘குரங்கு பொம்மை’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘மஹாராஜா’ எனும் தலைப்பு தெரிவு செய்யப்பட்டிருப்பதாக படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் அவருடன் ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்ராஜ், முனிஸ்காந்த், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இந்தத் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திரைப்படம் எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் உருவாகி வருவதாகவும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனிடையே ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் ‘ஃபார்ஸி’ எனும் இந்தி மொழி இணைய தொடர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பதும், ‘மேரி கிறிஸ்மஸ்’, ‘காந்தி டாக்ஸ்’, ‘மும்பைகார்’, ‘ஜவான்’ என தொடர்ந்து இந்தி படத்தின் படப்பிடிப்பில் பங்குபற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.