மலையாள சுப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் தயாராகி வரும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘ ‘மலைக்கோட்டை வாலிபன்’. மலையாள சுப்பர்ஸ்டார் மோகன்லால் கதையின் நாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் ஏனைய இந்திய திரையுலகினைச் சேர்ந்த முன்னணி நட்சத்திர கலைஞர்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு பி. எஸ். ரஃபீக் திரைக்கதை எழுத, மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்ய, பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார். சரித்திர காலகட்டத்திய படைப்பாக தயாராகி வரும் இந்த படத்தை ஜோன் மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி பிலிம்ஸ் மற்றும் மேக்ஸ் லேப் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஷிபு பேபி ஜோன், கொசுமோன் மற்றும் அனுப் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் 18ம் திகதி முதல் வட இந்திய மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மாரில் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் அனல் பறக்கும் கோபக்கனலோடு மோகன்லால் தோன்றுவதால் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. பிரம்மாண்டமான பட்ஜட்டில் தயாராகி வரும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ மலையாள மொழியில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற முக்கிய மொழிகளிலும் வெளியாகிறது.