கொரோனா இரண்டாவது அலை காரணமாக சாய்பல்லவி நடித்துள்ள படத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.சாய் பல்லவிநாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்து பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கைகள் மட்டுமே நிரப்புதல் என்றெல்லாம் பல கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. இதனால் புதிய படங்கள் ரிலீசாவதில் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
இந்த நிலையில் கொரோனா 2-வது அலை காரணமாக சாய்பல்லவி நடித்துள்ள ‘விராட பருவம்’ படம் தள்ளி வைக்கப்படுவதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். இந்த படம் வருகிற 30-ந்தேதி திரைக்கு வருவதாக இருந்தது. தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.
தெலுங்கில் தயாராகி உள்ள விராட பருவம் படத்தை தமிழிலும் வெளியிட முடிவு செய்து இருந்தனர். பெண் நக்சலைட்டின் காதல் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி உள்ளது. இந்த படத்தில் சாய் பல்லவி நக்சலைட்டாக நடித்து இருக்கிறார். ராணா நாயகனாக வருகிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் ராணாவால் சாய்பல்லவி சுட்டுக்கொல்லப்படுவது போல் கிளைமாக்ஸ் காட்சி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பும் உள்ளது.