உங்கள் சுவையை தூண்டும் நெத்திலி மீன் குழம்பு சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான நெத்திலி மீன் குழம்பு ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!
சமைக்க தேவையானவை
குறிப்பு
உங்களை சுவைக்கும் தூண்டும் கமகமக்கும் தமிழ்நாடு சமையல் உணவுகள். காலை உணவு மற்றும் மதிய உணவு இரவு உணவு மற்ற சில உணவுகள் செய்ய முதலில் தேவையான பொருட்கள் தூயமையாக இருப்பது நல்லது. காய்கறிகளை தண்ணீர் கொண்டு அலச வேண்டும். சமையலில் எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு இருத்தால் சுவையாக இருக்கும்.
உணவு செய்முறை : நெத்திலி மீன் குழம்பு
-
Step 1.
முதலில் மீனை சுத்தம் செய்து லேசாக உப்பு, மஞ்சள் தூவி கிளறி 20 நிமிடம் ஊற வைக்கவேண்டும் . பின்பு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவேண்டும் .பிறகு புளியை கரைத்து வைக்கவும்.பின்பு இஞ்சியை விழுதாக அரைக்கவும்.
-
Step 2.
அதன் பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், சோம்பு தாளித்த பினி நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி விழுது சேர்த்து நன்கு வதக்கிய பின் தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்..
-
Step 3.
பின் தக்காளி நன்றாக வதங்கிய பின கரைத்த புளியை ஊற்றவேண்டும் . இப்பொழுது அதில் உப்பு, மஞ்சள், மிளகாய், தனியா தூள்களை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும். பின்பு அடுத்து தேங்காய் பாலை சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க விட்டு மீனை சேர்க்கவேண்டும் . மீனை சேர்த்த உடன் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
-
Step 4.
மீன் 2 அல்லது 3 கொதியில் வெந்து விடும். குழம்பை இறக்கும் முன் ஒரு சிறிய வெங்காயத்தை தோலுடன் அதில் தட்டி போட்டு அடுப்பில் இருந்து இறக்கவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். நெத்திலி மீன் குழம்பு ரெடி
நன்றி : அறுசுவை சமையல்