தேவையான பொருட்கள்:
அயிரை மீன் – 300 கிராம்
வெங்காயம் – 250 கிராம்
தக்காளி – 2
பூண்டு – 15 பல்
மிளகாய் – 3
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – கொஞ்சம்
எண்ணெய் – 3 கரண்டி
கடுகு, உ.பருப்பு – அரைக்கரண்டி
வெந்தயம் – கால் கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
தனியா தூள்- 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவைக்கு.
புளி – சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய் விழுது – 3 தேக்கரண்டி
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் அயிரை மீன், கல் உப்பு போட்டு மூன்று நான்கு முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவ வேண்டும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியைக் கரைத்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உ.பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி மசிந்தவுடன், மிளகாய்த்தூள், தனியா தூள், மஞ்சள் தூள், சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் புளித்தண்ணீர் விட வேண்டும். நன்றாக கொதித்து மசாலா வாடை அடங்கியதும் மீனை போட வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து தேங்காய் விழுது சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும். சுவையான அயிரை மீன் குழம்பு தயார்.