திருமணமான பெண் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய நண்பர்கள் மற்றும் அன்புக்கு உரியவர்களிடம் திருமணத்திற்கு முன்பு இருந்ததை போல பேச முடியாவிட்டாலும், ஓரளவுக்கு அவர்களை விட்டுவிடாமல் தொடர்ந்து தொடர்பில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அவர்களை சந்திக்க வேண்டும் என்றால் தயங்காமல் புகுந்த வீட்டாரிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். அதே போல அவர்களிடம் இவர்களை அறிமுகப்படுத்தவும் செய்ய வேண்டும்.
ஆரம்பத்திலேயே விட்டுக் கொடுத்து விட்டால் நீங்கள் நினைக்கும் பொழுது நிச்சயம் அது தவறாகத்தான் தெரியும்.
அவர்களுடைய பாரம்பரிய வழக்கத்திற்கு ஏற்ப உங்களை தயார் படுத்துவதில் அக்கறை கொள்வார்கள்.
அந்த சமயத்தில் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை நீங்கள் மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்ளாமல், ஆரம்பத்திலேயே அவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அப்போது தான் உங்கள் மீது இருக்கும் பிரியமும் அதிகரிக்கும். திருமணமான பின் நீங்கள் நீங்களாக இருக்க அதிக அளவு முயற்சி செய்ய வேண்டும்.
கணவன் மற்றும் கணவன் வீட்டார் அவர்களுக்கு ஏற்ப உங்களை மாற்ற முயற்சி செய்வார்கள் ஆனால் அதை ஓரளவுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது.
உங்கள் தனித்துவத்தை மறந்து நீங்கள் ஆரம்பத்திலேயே அவர்களுக்காக விட்டுக் கொடுத்து விட்டால் பின்பு நீங்கள் நினைத்தாலும் நீங்கள் நீங்களாக வாழ முடியாமல் போய்விடும்.
இது அவர்கள் மீது வெறுப்பை உண்டாக்கும், இது உங்களுக்கு மட்டுமல்ல, அந்தக் குடும்பத்திற்கும் நல்லதல்ல.
திருமணமான பெண்கள் எல்லா வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.
இவ்வாறு செய்யச் சொல்லி அவர்கள் வற்புறுத்தினால் ஆரம்பத்திலேயே சகித்துக் கொண்டு சென்று விட்டால், அதை அவர்கள் சாதகமாக எடுத்துக் கொள்வார்கள்.
எனவே ஆரம்பத்திலேயே எல்லா வீட்டு வேலைகளையும் செய்வது, என்னுடைய பொறுப்பல்ல என்பதை நாசுக்காக ஐஸ் வைத்து சொல்லி காட்டி விடலாம்.
திருமணமான பின்பு ஒரு பெண் தான் சம்பாதிக்கும் பணத்தை தன் பிறந்த வீட்டிற்கு கொடுத்து உதவுவதாக இருந்தால் அதை முன்கூட்டியே அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
பிறந்த வீடு, புகுந்த வீடு மட்டுமல்லாமல் உங்களுக்காகவும் தனிப்பட்ட முறையில் ஒரு சிறு தொகையையாவது சேமிக்க பழகிக் கொள்ள வேண்டும்.
இது உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். இவைகளை ஆரம்பத்திலேயே விட்டுக் கொடுத்து விட்டால் பின்பு ஏமாற்றம் நிச்சயம்