யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எஸ்.அரூரன் எனும் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற பொறியலாளர்.
இவர் 2008 இல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்.
பொறியியல் துறையில் சாதிக்க புறப்பட்டு தான் செய்த குற்றம் என்னவென்று தெரியாது 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கும் எஸ்.அரூரன் போன்ற இளைஞர்களுக்கு நீதி செய்ய இந்த நாட்டின் சட்டங்களும் அரச நிருவாகமும் அனுமதி மறுக்கின்றன.
இந்த நிலையில் சிறைக்குள் இருந்து இலக்கியம் படைக்கும் சிறந்த முன்மாதிரி பணியை செய்து வரும் ஆரூரனை விடுவிக்க வேண்டும் என்று கலை இலக்கிய ரசிகர்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.