Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நற்றமிழன் விக்னேஷ் ஹைக்கூ கவிதைகள்

நற்றமிழன் விக்னேஷ் ஹைக்கூ கவிதைகள்

1 minutes read

இனி உன்னிடம் நான் பேச போவதில்லை …..
என்று சொல்பவர்கள்
நிச்சயம் விரைவில் பேசிவிடுவார்கள் ……
கோபம் நிஜமென்றால்
சொல்லி செல்லமாட்டார்கள் ……!!!


இதயத்தில் எல்லோருக்கும்
இடம் கொடு தவறில்லை ……
இதயத்தை எல்லோருக்கும் கொடுக்காதே…!


வெளிச்சம் மீதெனக்கு காதல்…
அவளை அணைக்க முடியாமல்
முத்தமிட முடியாமல்
தூரத்து காதலனாய்
ஓரங்க காதலனாய்
உறங்கா காதலனாய்
ரசிக்க மட்டுமே செய்யும்
கவிஞ காதலன் நான்…!


மணமேடையில்
மணப்பெண் அழுவது
காதலனை நினைத்தும்
இருக்கலாம்.


நீ பேசாமல் இருப்பது
எனக்கு மௌனம் அல்ல…
எனக்கு மரணம்…!


நற்றமிழன் விக்னேஷ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More