உலகளாவிய கவிஞர்களை புலவர்களை ஒருங்கிணைக்கும் ஒப்பற்ற கவிதை நூல் வெளியீடு ஒன்றை முனெடுக்க தமிழ்நாடு கவிஞர்கள் கலை இலக்கிய சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
“தமிழ் மொழி பாதுகாப்பில் நமது பங்கு” தமிழ் மொழியை வாழ்த்தி தனி தலைப்பிலும் கவிதை அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ்நாடு கவிஞர்கள் கலை இலக்கிய சங்கம் தெரிவித்துள்ளதாவது,
“உலகளாவிய கவிஞர்கள்,எழுத்தாளர்கள், புலவர்களை ஒருங்கிணைத்து அவர்களின் கவியாற்றலை போற்றும் வகையில் அமைய உள்ள மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பிற்கு கவிதைகள் விரைவாக வரவேற்கப்படுகிறது! மேலும் இதுவரை பெறப்பட்டுள்ள கவிதைகளின் கவிஞர்கள் பட்டியல் நாளை முதல் வெளியிடப்பட இருக்கிறது என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்! எனவே கவிஞர்கள் புலவர்கள் தங்களின் படைப்புகளை விரைந்து அனுப்ப வேண்டுகிறோம்!
#தமிழ் மொழி பாதுகாப்பில் நமது பங்கு என்ற தலைப்பிலும் தமிழ் மொழியை வாழ்த்தி தனி தலைப்பிலும் கவிதைகள் வரவேற்கப்படுகிறது
#கவிதைகள் 24 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் கவிதையின் கீழ் பெயர் கட்டாயம் இடம் பெற வேண்டும்
#புகைப்படம் தெளிவான முகவரி மற்றும் செல்லிடப்பேசி என்னுடன் கவிதைகளை அனுப்பவும்
#கவிதைகள் வந்து சேரும் வரிசையின் அடிப்படையில் கவிதை தொகுப்பில் வரிசைப்படுத்தப்படும்
#கவிதைகளை 9551547027 என்ற பகிரி (வாட்ஸப்) எண்ணிற்கு அனுப்பவும்.
# மேற்காணும் செய்தியினை தாங்கள் படித்துவிட்டு தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் பகிரவும்!..” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.