Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் ’வீணை மைந்தன் ஆக்கங்கள் இனவரைவியல் தகுதி கொண்டவை’ | முன்னாள் துணைவேந்தர் புகழாரம்

’வீணை மைந்தன் ஆக்கங்கள் இனவரைவியல் தகுதி கொண்டவை’ | முன்னாள் துணைவேந்தர் புகழாரம்

3 minutes read

’வீணை மைந்தன் ஆக்கங்கள் தன் இனவரைவியல் தகுதி கொண்டவை’

அறிவார்ந்த சமூக பண்பாட்டு விசாரணைகளை மிகுந்த பக்குவத்துடன் அணுகும் வீணை மைந்தன் நிதானமும்  நியாயமனதும் இவ்வாக்கங்களின் தொடர்பியல் வெற்றியின் அடிப்படை என்பேன் .

நாகலிங்கம் நூலாலய ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் சென்ற வெள்ளியன்று(29.04.2023) இடம்பெற்ற வீணைமைந்தன் புதிய மூன்று நூல்களின்  வெளியீட்டு வைபவ தலைமையுரையில் பேராசிரியர் கலாநிதி என் சண்முகலிங்கன் புகழாரம் .

இவ்வைபவத்தின் முதன்மைவிருந்தினராக யாழ்பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி சி .சிறீ சற்குணராஜா சிறப்பு விருந்தினராக கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் ரொரன்ரோ மனித நேயகுரல் அமைப்பின் தலைவருமான  திரு ஆர்.என்.லோகேந்திரலிங்கம்  ஆகியோர்| கலந்து சிறப்பித்தனர்.

பாரதி வேண்டுதலுடன் ஆரம்பமான இவ்வைபவத்தில்  நாகலிங்கம் நூலாலய மூலவர் ஆசிரியர் நாகலிங்கம் அவர்களின் திருவுருவப்படத்துக்கு செல்வி அம்பிகை சண்முகலிங்கன் மலர்மாலை சூட்டி,வரவேற்புரை நிகழ்த்தினார். பல்கலைக்கழக பரமே];வரன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சந்திர சதானந்தக்குருக்கள் ஆசியுரை வழங்கினார்.

விருந்தினர்களின் உரையை தொடர்ந்து நூல் வெளியீடும் இவ்வைபவத்தினையொட்டி கனடிய பாராளுமன்ற அனுசரணையுடன் பண்பாட்டின் ஆளுமை விருது வழங்கல் இடம்பெற்றது.

நூலின் முதல்பிரதியை யாழ்.பல்கலைகழக பதில் நூலகர் எஸ் கேதீஸ்வரன் பெற்றுக்கொண்டார். தாயகத்தில் ஆற்றிவரும் ஆக்கத்திறனான கலை வழி சுகநலக்கல்விப் பணிகளைப்பாராட்டி வைத்தியநிபுணர் சி. சிவன்சுதன் அவர்களுக்கும் தாயகத்தில் ஆற்றிவரும் விழிப்புலனற்ற பிள்ளைகளுக்கான வாழ்வகப்பணி ,உட்படுத்தல்  கல்விக்கான பணிகளைப்பாராட்டி  கல்வியியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர்  ஆ.ரவீந்திரன் அவர்களுக்கும் தாயகத்தில் ஆற்றி வரும அர்ப்பணிப்பான கிராமிய வலுவூட்டல் பணிகளைப்பாராட்டி  உள வளத்துணையாளர்,எழுத்தாளர் செ.யோசப்பாலா  அவர்களுக்கும் தாயகத்தில் ஆற்றி வரும் தனித்துவமான  இசையமைப்பு,காண்பிய படைப்பாக்கப்பணிகளைப்பாராட்டி  ஆக்க இசைக்கலைஞர் கு.அற்புதராஜ்,அற்புதன் அவர்களுக்கும் தாயகத்தில் ஆற்றி வரும் நிறைந்த தேடலுடனான தமிழியல் மீள் பதிப்பாக்கப் பணிகளைப்பாராட்டி  ஆசிரியர்,ஆய்வாளர் சி.ரமேஷ் அவர்களுக்கும் தாயகத்தில் ஆற்றி வரும் பால்நிலைச் சமத்துவ அடையாளத்துடனாக தனித்துவ இசைப்பணியைப் பாராட்டி  நாதஸ்வரக்கலைஞர் திருமதி தையல் நாயகி சுந்தரம் அவர்களுக்கும் பண்பாட்டின் ஆளுமைகள் விருது வழங்கப்பட்டது.

நூல்களுக்கான வெளியீட்டுரையை பேராசிரியர் சி.சிவலிங்கராஜா, சமூகவியல் சிரேஷ்ட விரிவுரையாளர் இ. இராஜே];கண்ணன் ஆகியோர் நிகழ்த்தினர். நிறைவாக சிறப்புபிரதிகள் வழங்கலுடனும்   நூலாசிரியரின் ஏற்புரையுடனும் நூலாசிரியருக்கான நாகலிங்கம் நூலாலய நினைவுப்பரிசு வழங்கலுடனும்  வைபவம் இனிதே நிறைவுபெற்றது.

 

 

 

 

 

 

 

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More