மலையேறி முழக்கு நீ
வான்முகில் கூடிட சேர் நீ
காட்டிடை காவலன் நீ
நாட்டில் என்றும் வாழ்வாய் நீ.
விடை கொடு மடை திறக்க
படை எடு நிலம் பதைக்க
உருகொண்டு நீ எழுக
ஈழத் சிவாலயம் எழட்டும்.
இனி எதற்கு உறக்கம்
இடுத்துரைக்க ஏன் தயக்கம்.
நமச்சிவாய என்ற முழக்கம்
வான் முகிலை ஒன்றாக்கட்டும்.
வெடுக்குநாறி ஏறிட நீ
மிடுக்கென மிளிர்ந்திட நீ
அடுக்கென கொள்ளடா – நீ
அடுத்தவர் கைப்பிள்ளையா?
உடைத்திட நீ துணிந்திடு.
தடையை எடுத்து எறிந்திடு.
உடுக்கை எடுத்து அடித்திடு
உதைப்பார் கால்கள் ஒடிந்திட.
கொண்ட குடி விட்டோடி
அதை பாடிடவோ பாட்டோடி.
ஊற்றெடுத்துச் சோர்தோடி
ஏற்றோடி பார் போற்றோடு.
நாளை முடியும் உனக்கு
காலமும் வேண்டாம் பிணக்கு.
முடித்திட உறுதி எனக்கு
மிஞ்சிடும் வீரத்தில் இருக்கும்.
நம்பிட உனக்கு இனி
என்றும் இருக்காது பிணி.
மாசி வரும் இராத்திரி பனி.
மோதிவெல்ல வாழ்வு கனியும்.
ஈடுணையற்ற ஈசனை
ஈர்த்து வந்த நேசனை
ஈழம் காக்கும் தேசனை
மனத்தில் இருந்து வாசனை.
வெடுக்குநாறியில் பார்
இருக்காது என்றும் போர்.
இருந்தும் விழிக்காது பார்.
ஏமாந்து மீண்டும் வாழ்ந்திட.
நதுநசி