அண்மையில் தமிழ் நாடு திண்டிக்கல் காந்தி கிராம நிகர் நிலைப்பல்கலைக்கழகத்து நிகழ்ந்த பன்னாட்டு ஆய்வரங்கின் மைப்பொருளுரையின்போது யாழ்ப்பாணப்பல்கலைகழக மேனாள் துணைவேந்தரும் சமூகவியல் சிரேஷ்டபேராசிரியருமான என் சண்முகலிங்கன் மேற்கண்டவாறு தெரிவித்தார்
தேசிய எல்லைகளைத்தாண்டிய தமிழர் புலம்பெயர்வின் இயங்கியல் உலகத்தமிழர் எனும் புதிய முகத்தை ,அடையாளத்தை தந்திருக்கிறது. ஆரம்பத்தில் தாய்த்தேசம் ,புலம்பெயர் தேசம் என்ற இருபரிமாணங்களுக்குள் மட்டுப்பட்ட தமிழர் புலம்பெயர்வானது காலப் போக்கில் புலம்பெயர் தேசங்களில் ஆழ வேர்விட்டது. பண்பாட்டிடை வாழ்வின் எடுத்துக்காட்டானது. காலப்போக்கில் தமிழர் என்ற அடையாளத்துடனான பண்பாட்டு செயற்பாடுகளினடியாகவும் புதிதாய் வாய்த்த நவீன தொடர்பூடக வெளியின் பயனாகவும் உலகத்தமிழர்,உலகளாவிய தமிழர் என்ற புதிய அடையாளத்தை கண்டுள்ளது. கூடவே இன்றைய பண்பாட்டிடை கோட்பாடு ஆய்வுகளின் புதிய பரிமாணங்களுக்கும் காலாகியுள்ளது.
தொன்மையான சங்க கால இலக்கிய அடையாளத்திலிருந்து இன்றையகாலத்து தமிழ் சினிமாவரை இப்புதிய தமிழ் அடையாளத்தின் ,தமிழ்த்தனத்தின் பரவலும் கலப்பும் விரிந்துள்ளது. பலமானதும் பலவீனமானதுமான அம்சங்களுடன் பரிணமித்துள்ள இந்த பண்பாட்டுப்பரவலின் புதுமுகம் தொடர்பான சமூக மானிடவியல் ஆய்வு மதிப்பீடுகள் வேண்டப்டுகின்றன ,அதனடியாகவே நாங்கள் அவாவுகின்ற உலகத்தமிழர் மேன்மைகளை எட்ட முடியும் .
.ஆய்வரங்க இணைபாளரும் மொழிகள்,கிராமிய கலைகள் பீடத்தின் பீடாதிபதியுமான பேராசிரியர் ஓ. முத்தையா அவர்கள் தலைமையில் இடப்பெற்ற இவ்வாய்வரங்கில் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் த.ஆறுமுகம் புதுச்சேரி சேரி மொழிகள் ,பண்பாடு ஆராய்ச்சி நிறுவன மேனாள் பணிப்பாளர் மானிடவியல் பேராசிரியர் பத்தவத்சல பாரதி, புது டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ச, ஸ்ரீநிவாசன்,
ஆய்வாளர் பேராசிரியர் நா.கண்ணன்,தமிழ் ஆய்வாளரும், தமிழ் ஆர்வலரும், தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் தலைவருமான முனைவர் சுபாஷிணி கனகசுந்தரம் உட்பட பல பன்னாட்டு உள்ளூர் அறிஞர்கள் கலந்து சிறப்பித்தனர்.