ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தாமரைச்செல்வி எழுதிய “உயிர்வாசம்” என்ற புதிய நாவல் வெளியீடு வெகு விமர்சையாக நேற்று இடம்பெற்றது. நிறைந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் உயிர்வாசம் நாவல் வெளியிட்டு வைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
கிளிநொச்சியின் பரந்தன் குமரபுரத்தில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட சுப்பிரமணியம் இராசம்மா தம்பதியினர் மணிமண்டத்தின் முதல் நிகழ்வாக இந்த வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. உயிர்வாசம் நாவல் கையளிப்பு நிகழ்வில், ஆர்வத்துடன் மக்கள் கலந்து கொண்டனர்.
ஈழத்திலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு அகதிகளாக செல்லும் மனிதர்களின் வாழ்வுப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட உயிர்வாசம் நாவல் குறித்து யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும் விமர்சகருமான தி. செல்வமனோகரன் விமர்சன உரையினை நிகழ்த்தியிருந்தார்.
அத்துடன் இந்த நிகழ்வில், கவிஞர் கருணாகரன், மற்றும் யேசுவா அடிகளாரும் உரைகளினை நிகழ்த்தியிருந்தனர். இதேவேளை தற்போது புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழும் தாமரைச்செல்வி, இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஏற்புரையை வழங்கினார்.
நிகழ்ச்சியினை தாமரைச்செல்வியின் சகோதரரும் வணக்கம் லண்டன் இணையத்தின் ஆசிரியரும் நிறுவனருமான சுரேஸ் தொகுத்து வழங்கியிருந்தார்.
புகைப்படங்கள்- மு. தமிழ்செல்வன்