சோழன் உலக சாதனை நிறுவனத்தின் குமுகாய தொண்டாளர் விருது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி எழுத்தாளர், வெற்றிச்செல்விக்கு வழங்கப்பட்டது.
மேற்படி சமூகசேவைப் பணிப்பாராட்டு விருது நிகழ்வானது 23.06.2023 அன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றது.
குமுகாயப் பணிகளில் தொடர்ச்சியாகப் பணியாற்றிவரும் வெற்றிச்செல்வியின் இடையறாத சேவையைப் பாராட்டி வழங்கப்படும் இக் குமுகாய தொண்டாளர் விருது இலங்கையில் வழங்கப்படும் முதலாவது விருதாகும்.
இவ்விருதை வெற்றிச்செல்வி அவர்கள் ஆரம்பித்து நடத்திவரும் அவரது ஆற்றல் நுண்கலைக் கல்லூரியில் அவர் பணியாற்றிவரும் மக்கள்மத்தியில் பெற்றுக்கொண்டார்.