Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் தூரத்தே ஒலிக்கும் பாடல் | கனகபாரதி செந்தூரன்

தூரத்தே ஒலிக்கும் பாடல் | கனகபாரதி செந்தூரன்

1 minutes read
Image may contain: one or more people, people standing, people walking and outdoor

உதிரம் நழுவும் நரம்புகளில்
உன் எண்ணத்தை
உருட்டிக்கொண்டோடுகின்றன
பெரு நாளங்கள்..

சலிக்காமற் சுவாசிக்கும்
சரீரக் கூட்டிற்குள்
இன்னும் எஞ்சியிருப்பது
உன் பழைய நினைவுகள் தான்

கிறுகிறுக்கும் மூளையின்
கிடங்கு மேடெல்லாம்
ஆர்ப்பரித்துக்கொண்டேயிருக்கின்றன
ஆறாத அலைகள்

தூரத்தே ஒலிக்கும்
இருவருக்கும் பிடித்த பாடல்
துண்டாடப்பட்ட ஸ்வரங்களில்
முகாரி இசைத்துக்கொண்டிருக்கின்றன.

கனகபாரதி செந்தூரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More