0
உதிரம் நழுவும் நரம்புகளில்
உன் எண்ணத்தை
உருட்டிக்கொண்டோடுகின்றன
பெரு நாளங்கள்..
சலிக்காமற் சுவாசிக்கும்
சரீரக் கூட்டிற்குள்
இன்னும் எஞ்சியிருப்பது
உன் பழைய நினைவுகள் தான்
கிறுகிறுக்கும் மூளையின்
கிடங்கு மேடெல்லாம்
ஆர்ப்பரித்துக்கொண்டேயிருக்கின்றன
ஆறாத அலைகள்
தூரத்தே ஒலிக்கும்
இருவருக்கும் பிடித்த பாடல்
துண்டாடப்பட்ட ஸ்வரங்களில்
முகாரி இசைத்துக்கொண்டிருக்கின்றன.
கனகபாரதி செந்தூரன்