Monday, March 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கவிதை| பசி | தீபச்செல்வன்

கவிதை| பசி | தீபச்செல்வன்

1 minutes read

எரியும் அனலில்
தேகத்தை உருக்கி
உயிரால் பெருங்கனவை எழுதிய
ஒரு பறவை
அலைகிறது தீராத் தாகத்தில்

ஒரு சொட்டு நீரில் உறைந்த
நிராகரிக்கப்பட்ட ஆகுதி
வேள்வித் தீயென மூழ்கிறது

சுருள மறுத்த குரல்
அலைகளின் நடுவில் உருகிய ஒளி
உறங்கமற்ற விழியில் பெருந்தீ
இறுதிப் புன்னகையில்
உடைந்தது அசோகச் சக்கரம்

எந்தப் பெருமழையாலும்
தணிக்க முடியாத அனலை
இன்னமும் சுமந்து திரிபவனுக்காய்
ஒருநாள்
எழுமொரு நினைவுதூபி
வந்தமரும் ஒரு பறவை
நிறைந்திருக்கும் பூக்கள்

தணியும் அவன் பசி.

தீபச்செல்வன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More