Monday, March 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் முகமூடி மனிதன் | வில்லரசன் கவிதை

முகமூடி மனிதன் | வில்லரசன் கவிதை

1 minutes read

கழற்ற முடியாத படி
மனிதர்கள் முகமூடி
அணிந்திருந்த நாளில்
அவனிடம் ஓரே ஒரு
முகமூடி மட்டுமே
கைவசம் இருந்தது..

கோபக்காரன் என
பெயர் பொறிக்கப்பட்ட
அந்த முக மூடி
அவனை சீண்டுபவர்களிடம்
இருந்து கொஞ்ச நாள்
காப்பாற்றியது

நண்பர்களும்
மனைவியும்
கூட அவன் முகமூடியை
அகற்றி
அவன் தூய முகத்தை தரிசிக்க
அச்சப் பட்டனர்..

சினத்தளும்புகளுடன்
திரியும் ஒரு நாளில்
பிறந்து சில மாதங்களே
ஆன மகளின்
முத்தத்தில் அவன் முக
மூடி கழன்றது..

என்ன ஆச்சரியம் !
இப்போது அவன் முதுகில்
முளைத்து இருந்தது
தன் மகளுக்கு பறக்க
கற்றுத்தர புதிய
இறக்கைகள்..

வில்லரசன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More