பெண்
அற்புதத்தின் ஆதி
அவளுக்குள் உழன்று அவளைப் புளிந்து
ஆனந்த வானை வரையும் நிர்மலத் தெய்வம்
பெண்ணின்றி மண்ணில் புன்னகை ஜனிக்குமா
கண்ணில்லா பிறவி போல் வாழ்வு ஆகுமே
பெண்வீணை மீட்டும் ஆணின் கைகள் வீணையாகின்றது
பெண்ணுக்காய் மலர்பறிக்கும் ஆணின் கைகள் கதிராகின்றது
பெண்கையால் உண்ணும்
உணவால் ஆயுள் பெருக்கிறது
பெண்பார்வை உன்கோர்வையானால்
ஆண்மை நீள்கிறது
பெண் இந்தப் பூமியின் அற்புத அட்சயம்
உலக அதிசயங்களை விஞ்சிய திவ்விய பந்தம்
அவள் தரும் திட்டும் புன்னகையும்
அன்பின் தேசிய கீதம்
ஆகாய வாணியும் அவளே
பூமா தேவியும் அவளே
அவள் நரம்புகளில் ஓடும்
செங்குருதியால் முளையாகிறான் ஆண்
வானில் விழும் மழைத்துளிகள்
மலர்களுக்கு உயிர்பாய்ச்சுவதைப்போல்
அவள் சிந்தும் அமுத ரசம்
அன்பின் வீட்டிற்கு உணர்வு பாய்ச்சுவதே உசிதம்
இரவு 9.18
மலை
த.செல்வா