உயிரை உரமாக்கி வளர்த்தபயிர்
கருக விடலாமோ சுதந்திரப்பயிர்
ஆசைக்குயிலே –மழை வர பாடு குயிலே…
மறதியினாலே நிலை தடுமாறும்
மாந்தர்கள் வாழ்வு மீண்டிட வேண்டும்
உறுதியிழந்து வரண்டிடும் மனங்கள்
உயிர்த்தெழும் காலம் உடன் வரவேண்டும்
ஆசைக்குயிலே –மழை வர
பாடு குயிலே…
நுகர்வெனும் மாய வலையினில் வீழும்
நாசம் நீங்கிய நிலை வரவேணும்
அகமதில் என்றும் சுயமதின் மேன்மை
ஆற்றலாய் விரிந்து நிமிர்ந்திடவேண்டும்
அடிமைகளாக சுயம் தொலைக்கின்ற
அவலம் முடிக்கும் உறுதிகள் செய்வோம்
விடியலின் திசையில் விழித்திடும் இந்நாள்
பெருமைகள் காத்தே பெரு நிலை காண்போம்!!
உயிரை உரமாக்கி வளர்த்தபயிர்
கருக விடலாமோ சுதந்திரப்பயிர்
ஆசைக்குயிலே –விடியலை
பாடு குயிலே…
மகானுபவன்