நேற்று நான் என் காணிக்குள்
குந்தியிருக்கும்
புத்தரைப் கண்டேன்
நீங்கள் வருவதற்கு முதல்
இங்கு பிள்ளையார்
குந்தி இருந்தாரே
உங்களைக் காணவில்லையே
எப்பொழுது வந்தீர் என்றே
நிலம் பிடிக்கும் ஆசையில்
நீங்களுமா புத்தரே என்றேன்
ஐயோ இல்லை அவர்களைப்போல்
என்னையும் இனவாதி ஆக்கிவிட்டார்கள்
என்று ஆத்திரமாக
சொன்னார் புத்தர்
அவர்கள் சொல்லுவதை
கேட்டு நடவுங்கள்
அன்பு கருணை எதுகுமே
தெரியாதவர்கள்
சரியாக புரியாதவர்கள்
உங்களையும்
கொன்று போடுவார்கள்
கவனம் என்றேன்
அத்தனை தன்
தம்மபத தத்துவத்தையும்
அடுக்கி பெட்டியில்
வைத்து விட்டு
பயத்தோடு இருக்கிறார்
பாவம் அந்த புத்தர்
எங்கள் ஒவ்வொரு வளவுகளிலும்.
பா.உதயன்