இருமல் ,தொண்டை சூடு மற்றும் உடல் சூடு ஆகிய அனைத்துக்கும் நல்ல தீர்வு வெற்றிலை துளசி சூப் இதை அருந்தி வர நிரந்தரமாக இந்த நோய்களில் இருந்து தீர்வு பெறலாம்.
தேவையான பொருட்கள்
தண்ணீர் – 1 கப்
சீரகப் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
துளசி இலை – ஒரு கைப்பிடி அளவு
வெற்றிலை – 5 அல்லது 6 இலைகள்
புளி கரைசல் – ஒரு டீஸ்பூன்
இஞ்சி – ஒரு துண்டு
தக்காளி – ஒன்று
சிவப்பு மிளகாய் – ஒன்று
உப்பு – தேவையான அளவு
செய்முறை
இஞ்சியை ஒன்றும் பாதியாக நசுக்கிகொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் தண்ணீர் ஒரு கப் (100 மிலி) ஊற்றி, சூடானவுடன், மஞ்சள் தூள், ஒரு கைப்பிடி துளசி இலை, வெற்றிலை ஐந்தாறு இலைகள், புளி கரைசல், நசுக்கிய இஞ்சி, தக்காளி, சிவப்பு மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து பக்குவம் வந்தவுடன் இறக்கி வடிகட்டி மிளகு தூள் சேர்த்து சூடாக சூப்பைப் பரிமாறவும்