ஆஸ்துமா நோயானது முழுமையாக குணப்படுத்த முடியாத ஒன்றாகும்.
உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள், ஒவ்வாமையைத் தூண்டுதல் போன்றவற்றால் ஏற்படுகிறது.
இதனை கட்டுப்படுத்த சில வழிகள் உள்ளன.இதற்கு முதல் வழி உணவு முறையே ஆகும்.
அவற்றுள் ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் சில உணவுகளை உட்கொள்ளக்கூடாது.ஆஸ்துமா நோயாளிகள் பால் பொருட்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
ஏனெனில் பால் பொருட்கள் ஆஸ்துமாவை தூண்ட வாய்ப்புள்ளது. மேலும் முட்டைகள்,சிட்ரஸ் பழங்கள்,கோதுமை மற்றும் சோயா பொருட்கள் போன்றவையும் ஆஸ்துமா அபாயத்தை அதிகரிக்கும்.
நட்ஸை ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட்டால்,அது தீவிரமாக்கி, நிலைமையை மோசமாக்கும்.இது தவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஆஸ்துமா நோயாளிகள் உட்கொண்டால்,அதில் சேர்க்கப்படும் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் இதர உட்பொருட்கள் அலர்ஜியை தூண்டிவிடும். எளிதில் செரிமானம் அடையாத உணவுகளை தவிர்த்தல் சிறந்ததாகும்.
எனவே உணவுகளை கட்டுப்படுத்துவதனால் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தலாம்.