Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் உணவு முறை பற்றி சித்தர்கள் கூறியது

உணவு முறை பற்றி சித்தர்கள் கூறியது

2 minutes read

நீண்ட நாட்கள் அரோக்கியமாகவும், உடல்நலத்துடனும் வாழவேண்டும் என்கிற எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு. மனிதனின் ஆயுளை அதிகரிக்க பல்வேறு ஆய்வுகள் நடந்து விடுகிறது. இருந்தபோதிலும், ஆயுளை அதிகரிக்க உதவும் உணவு வகைகளை பற்றி நமது சித்தர்கள் எழுதிய குறிப்புகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

உண்ணும் உணவை சரிவிகிதமான சத்துகளுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஆயுளை அதிகரிப்பதோடு, உடல் உறுப்புகளை ஆரோக்கியமாகவும் பரமாரிக்க உதவும்.

தினமும் குறைந்தபட்சம் ஒரு வேளையாவது காரமான உணவுகளை சாப்பிட வேண்டும். இது நம் முன்னோர்களே பல ஆயிரத்திற்கு முன் குறிப்பிட்டுள்ள தகவலாகும். இதை தான் இன்றைய ஆய்வுகள் கூறுகின்றன.

காலை நேரத்தில் அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை சாப்பிடுவது நம் ஆயுளை முற்றிலுமாக பாதித்து விடும். குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை எப்போதுமே சேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்

கேரட்டினோய்ட்ஸ் சத்து அதிகமாக மீன்களில் இருக்கிறது. அதுப்பொன்ற சத்துகளை பெற்ற விலை மீன் என்கிற செலமன், ட்யூனா, அயிலா என்கிற மெக்காரல், பேச்சாளை என்கிற சார்டின் மீன்களில் மெகா 3 வைட்டமின் சத்து இருக்கிறது.

எப்போதுமே உணவை குறைவான அளவில் எடுத்து கொண்டால் உடலுக்கு நல்லது தான். உணவுகளை பற்றிய ஆய்வுகளும் இதை தான் சொல்கின்றன.

தினமும் 3 பாதாம் பருப்பு சாப்பிட்டு வருவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். நீண்ட காலம் இளமையாக இருக்க இது போன்ற பருப்பு வகைகளில் ஏதேனும் ஒன்றை தினசரி சாப்பிட்டு வந்தாலே போதும்.

உறுப்புகள் செயலிழத்தல் நமது உடல் தேவையையும், உறுப்புகளின் தேவையையும் நன்றாக அறிந்து உண்ண வேண்டும்.அளவுக்கு அதிகமாக உண்பதால் உடல் எடை கூடுதல், கலோரிகள் அதிகரித்தல், சர்க்கரை நோய், இதய பாதிப்பு முதலிய பல்வேறு அபாயங்கள் ஏற்படுமாம்.

நன்றி சமயம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More