உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 42 கோடி மக்கள் நீரிழிவு நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
ரத்தத்தில் அதிகமான சர்க்கரை இருப்பவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும் என்று கூறுகிறார்கள். சாதாரணமாக தண்ணீர் அதிகமாக குடித்தால் சிறுநீர் அடிக்கடி வெளியேறுவது வழக்கம்.
ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதை விட அதிகமாக சிறுநீர் வெளியேறிவிடும் என்று கூறுகிறார்கள். சாதாரண மனிதர்கள் ஒரு நாளைக்கு 4 முதல் 7 முறை சிறுநீர் கழிப்பார்கள் என்றும் ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதிலிருந்து இரு மடங்கு அதிகமான சிறுநீர் கழிப்பார்கள்
எப்பொழுது சாப்பிட்டு முடித்தாலும் மிகவும் சோர்வாக காணப்படும். குறிப்பாக அதிகமான கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை சாப்பிடும் பொழுது இன்னும் அதிகமான சோர்வு ஏற்படும். இப்படி ஏற்பட்டால் நிச்சயமாக உங்களை நீங்கள் பரிசோதித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
அதிகமாக உடலில் இருந்து நீர் சத்து வெளியேறுவதால் உடலுக்கு இன்னும் அதிகமான நீர் தேவைப்படுகிறது. எனவே உடலுக்கு தாகம் அதிகரிக்கும்.
கண்பார்வை மங்குதல் என்பது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான மற்றொரு அறிகுறியாகும்.
சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் தலைவலி அடிக்கடி ஏற்படும் என்று கூறுகிறார்கள். தலைவலி ஏற்படுவதற்கு பலவிதமான காரணங்கள் கூறப்பட்டாலும் மேலே உள்ள காரணங்களோடு தலைவலியும் உங்களுக்கு அடிக்கடி ஏற்பட்டிருந்தால் நிச்சயமாக நீங்கள் உங்களை பரிசோதித்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.
நன்றி மருத்துவ உலகம்