Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வடக்கில் வெற்றிக் கொடி நாட்டியது தமிழ் தேசிய கூட்டமைப்புவடக்கில் வெற்றிக் கொடி நாட்டியது தமிழ் தேசிய கூட்டமைப்பு

வடக்கில் வெற்றிக் கொடி நாட்டியது தமிழ் தேசிய கூட்டமைப்புவடக்கில் வெற்றிக் கொடி நாட்டியது தமிழ் தேசிய கூட்டமைப்பு

1 minutes read

வட மாகாண சபைத்தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி  30 ஆசனங்களை ( போனஸ் 2 அடங்கலாக)  கைப்பற்றி அமோக வெற்றியடைந்துள்ளது.

இதுதவிர ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும், ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

யாழ் மாவட்டத்தில் 213,907 வாக்குகளை மொத்தமாக பெற்ற தமிழரசுக் கட்சி  14 ஆசனங்களைக் கைப்பற்றியது.

இங்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் 2 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தல் சர்வதேசத்தின் கவனத்தினை முற்றாக ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர வட மாகாணத்தின் மற்றைய மாவட்டங்களில் கட்சிகள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை வருமாறு,

மன்னார் :
இலங்கை தமிழரசுக் கட்சி  – 3
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 1
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1

கிளிநொச்சி :
இலங்கை தமிழரசுக் கட்சி  – 3
ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 1

முல்லைத்தீவு :
இலங்கை தமிழரசுக் கட்சி   – 4
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 1

வவுனியா :
இலங்கை தமிழரசுக் கட்சி  – 4
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 2

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More