இந்திய பிரதமர் பொது நலவாய மகாநாட்டுக்கு வராதது இலங்கைக்குத் தோல்வியைத் தராது எனக் கூறப்பட்டாலும் அது மகிழ்ச்சி தராத ஒரு மாநாடு என்பதே உண்மை என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
இந்தியப் பிரதமரை பொது நலவாய மாநாட்டில் கலந்து கொள்ள வைக்க இலங்கை அரசாங்கம் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டது. அண்டைய நாடான இந்தியாவை இதில் கலந்துகொள்ள வைக்கவேண்டுமென பலத்த எதிர்பார்ப்புடன் இலங்கை காத்திருந்த போதும் தமிழகத்தின் உறவுகளின் தொடர் போராட்டங்களினாலும் விடாமுயற்சிகளினாலும் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளவில்லை என்பது எமக்கு பலத்த ஆறுதலைத் தருகிறது. இதற்கு நாம் தமிழக மக்களுக்கும் உறவுகளுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.