இங்கிலாந்து இளவரசி கொலை செய்யப்பட்டதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை என பிரிட்டிஷ் போலீஸார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997ம் ஆண்டு மரணமடைந்தார். அவர் கார் விபத்தில் இறக்கவில்லை பிரிட்டன் ராணுவத்தைச் சேர்ந்த ஒருவரால்தான் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து மீண்டும் விசாரணை தொடங்கியது.
இந்நிலையில் நேற்று லண்டன் போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் டயானா கொலை செய்யப்பட்டதற்கான எந்த தடையங்களும் கிடைக்க வில்லை என தெரிவித்துள்ளனர்.