இந்தியாவின் பூனே விமான நிலையத்தில் வைத்து இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் போலியான இந்திய கடவுச்சீட்டுக்களை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டுபாய் நோக்கி செல்வதற்காக சென்னையில் இருந்து பூனே விமான நிலையத்தை சென்றடைந்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
36 வயதான உதேன் சுப்பிரமணியம், 25 வயதான ருக்மான் ஆகிய இரு சந்தேகநபர்களும் சென்னையில் பல காலமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
எனினும் இவர்கள் இருவரும் சண்முகம் தனுன் மற்றும் பாண்டியன் ஆகிய பெயர்களில் கடவுச்சீட்டுக்களை கொண்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
0