Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 20 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்! கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 20 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 20 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்! கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 20 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

1 minutes read

ஆஸ்திரேலியாவிலிருந்து 20 இலங்கையர்கள் நேற்று நாடுகடத்தப்பட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் தீவுகளிலிருந்து இவர்கள் நாடுகடத்தப்பட்டதாக ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரண்டன் ஓ கோர்னர் தெரிவித்துள்ளார். குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கான சட்ட அந்தஸ்தை இழந்துள்ளதாகவும் அவர் குறிபிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் இதுவரையில் 963 புகலிட கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Australia-Immigration-Stamp0_eu25102012

இதில் 200 பேர் மட்டுமே சுய விருப்பின் அடிப்படையில் நாடு திரும்பியுள்ளதாகவும் ஏனையோர் கட்டாயத்தின் பேரில் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்று இலங்கைக்கு நாடுகடத்த 20 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை அதிகாலை வேளை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More