பத்மநாபபுரம் அரண்மனைனையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க யுனஸ்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து இன்று தில்லியில் யுனெஸ்கோ அமைப்பினரைச் சந்தித்த கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் கே.சி. ஜோசப், கூறும்போது புதிய பாரம்பரிய சின்னங்கள் தேர்ந்தெடுப்பதற்கான வரைவுப் பட்டியலில் பத்மநாபபுரம் அரண்மனையும் இடம் பெற்றுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமாக ‘உலக பாரம்பரிய சின்னம்’ என்று அறிவிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள 981 இடங்களை பாரம்பரிய சின்னங்களாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது. அவற்றில் இந்தியாவில் மட்டும் 30 இடங்கள் உள்ளன. இப்போது 31-வது இடமாக 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பத்மநாபபுரம் அரண்மனை இந்த பட்டியலில் இணைய உள்ளது.