முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ம் ஆண்டு நிறைவுகொண்ட பெரு யுத்தத்தில் இறந்த நாற்பதாயிரம் உறவுகளுக்காக இன்று உலகமெங்கும் எழுச்சியுடன் நினைவு கொள்ளப்பட்டது. தமிழர் வாழும் நகரங்கள் யாவும் மக்கள் கண்ணீரோடு தமது அஞ்சலிகளை தெரிவித்தனர்.
கடந்த 5 வருடங்களாக தொடரும் யுத்தத்தின் நீட்சியாக படரவிடப்பட்ட வன்முறையில் இருந்து தாயக உறவுகளை பாதுகாக்க வேண்டுமென கோரிக்கைகள் இன்றையதினம் முன்வைக்கப்பட்டன.
லண்டனில் நடைபெற்ற இன் நிகழ்வில் பலாயிரக்கனக்கான தமிழர்கள் ஓன்றுகூடி தமது அஞ்சலிகளை செலுத்தியதுடன் தமிழ் இனத்துக்கு இழைக்கப்படும் திட்டமிட்ட இன அழிப்பினை சர்வதேசத்துக்கு எடுத்து சொல்லி நீதிக்கான கோரிக்கையையும் வைத்தனர்.