நேற்று சனிக்கிழமை தெற்கு லண்டன் குரொய்டனில் மாபெரும் இசை நிகழ்வு “அபூர்வ ராகங்கள்” நடைபெற்றது. Lebara மொபைல் ஆதரவில் நடைபெற்ற இவ் இசை நிகழ்ச்சியினை Concern SriLanka Foundation ஒழுங்கு செய்திருந்தது.
ஆரம்பத்தில் உள்ளூர் இளம் கலைஞர்களின் நிகழ்வு நடைபெற்றதுடன் சின்மயி மற்றும் விஜய் பிரகாஷ் பாடிய சில பாடல்களுக்கு லண்டனில் இயங்கும் நாடியப்பள்ளி மாணவிகளின் நடனங்கள் பின்னணியில் இடம்பெற்றமை அரங்கத்தை கட்டிப்போட வைத்தது.
தென்னிந்திய சினிமா பின்னணிப் பாடல்கள் மூலம் புகழ் பெற்ற விஜைப் பிரகாஷ் மற்றும் சின்மயி தங்களது தனித்துவமான பாடல்கள் மூலம் அரங்கை அதிரவைத்தபோதும் பழைய பாடல்கள் பல பாடியமையும் ரசிக்க வைத்தது.
சின்மயி பாடிய சிங்கார வேலனே பாடலுக்கு ட்ரம் வாத்தியக் கலைஞர் தவில் வாசித்தமை இவ் நிகழ்வில் சிகரம்போல் அமைந்தது, அத்தனை சிறப்பு.
ஆண்டு தோறும் நடைபெறும் “அபூர்வ ராகங்கள்” நிகழ்வு வழமைபோல் மக்கள் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வை வெற்றி வானொலி அறிவிப்பாளர் ஜே ஜே மற்றும் தீபம் தொலைக்காட்சி தொகுப்பாளர் யோகா தினேஷ் ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தனர்.
(நன்றி | படங்கள் : அஜன் வீடியோ, ஈகிள் மீடியா, வணக்கம் லண்டன்)