சிசிலி மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா இடையேயான கடற்பகுதியில் சுமார் 590 அகதிகளுடன் சென்றுகொண்டிருந்த மீன்பிடி படகில், நெரிசல் காரணமாக மூச்சுத் திணறி 30 பேர் பலியானார்கள்.இத்தாலியில் தஞ்சம் அடைய வந்துகொண்டிருந்த அவர்களின் படகை கடலோர பாதுகாப்புப் படையினர் நடுக்கடலில் நிறுத்தியபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.அந்தப் படகில் 2 கர்ப்பிணிகள் உள்பட 590 பேர் இருந்தனர். அதிகமான நபர்களை ஏற்றி வந்ததால் நெருக்கடி காரணமாக அவர்களில் 30 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.