0
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள்5 பேரை, அந்நாட்டுக்கான இந்திய தூதர் யாஷ் சின்கா இன்று சந்தித்து பேசினார். கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் அவர்களை சந்தித்த இந்திய தூதர், நீதிமன்றம் மூலம் விடுதலைப்பெற்று இந்தியா அழைத்துவர மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும், மீனவர்கள் தங்களது உறவினர்களுடன் தொலைபேசி மூலம் பேச ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.