இலங்கையில், வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்று அந்நாட்டின் அனைத்துக் கட்சிகளைûயும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது.
இதுகுறித்து கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையில் எவ்வித அச்சமுமின்றி தங்கள் அதிபரைத் தேர்வு செய்வதற்கு மக்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
“தேர்தலில் ராஜபட்சவுக்கு எதிராக சிறுபான்மை தமிழர்கள் வாக்களிப்பதைத் தடுப்பதற்கு ராணுவத்தை அரசு ஈடுபடுத்தக் கூடும்’ என்று எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்ரிபாலா ஸ்ரீசேனா வியாழக்கிழமை கூறியநிலையில், ஐரோப்பிய ஒன்றியம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அதிபர் தேர்தல் குறித்து வரம்பு மீறி ஐரோப்பிய ஒன்றியம் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று இலங்கை வெளியுறவுத் துறை கூறியுள்ளது. இதனிடையே, ரத்னாபுரா மாவட்டத்தில் பெல்மதுளை பகுதியில் ஸ்ரீசேனா கலந்துகொண்ட பிரசாரக் கூட்டத்தில், அரசு ஆதரவாளர்கள் சிலர் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.