0
அமான் அரசு பிடித்து வைத்திருக்கும் ஈராக் பெண் பயங்கரவாதியை இன்று மாலைக்குள் விடுவிக்காவிட்டால், இன்று சூரியன் மறையும் நேரத்தில் தங்கள் வசம் இருக்கும் ஜோர்டான் நாட்டு விமானியை கொலை செய்ய உள்ளதாக ஐ.எஸ்.பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பிடித்து வைத்துள்ள ஜப்பான் பத்திரிக்கையாளரின் மனைவிக்கு அவர்கள் அனுப்பி உள்ள ஆடியோ பதிவில் இந்த மிரட்டலை பதிவு செய்துள்ளனர்.