வவுனியா பஸ் நிலையத்திற்கு அருகில் கஞ்சா பொதியுடன் இருவர் கைது செய்யப்பட்டதாக மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி பி.ரகுநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் நேற்று 11-02-2015 புதன்கிழமை வவுனியா நகரப்பகுதியில் கஞ்சாப்பொதியுடன் இருவர் நடமாடுவதாக பூனாவ கடற்படை முகாமைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
அந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரிடமிருந்தும் 1754 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டது.
கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியா நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் மட்டக்கிளப்பைச் சேர்ந்தவர் ஒருவர் வவுனியாவை சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்தே கஞ்சாவை கொண்டு வந்தனர் என்று சந்தேகிக்கப்படுகின்றது.