Thursday, May 2, 2024

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஈராக்கில் விமான தாக்குதல்நடத்தி இனப்படுகொலை? ஈராக்கில் விமான தாக்குதல்நடத்தி இனப்படுகொலை?

ஈராக்கில் விமான தாக்குதல்நடத்தி இனப்படுகொலை? ஈராக்கில் விமான தாக்குதல்நடத்தி இனப்படுகொலை?

0 minutes read

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் உள்ள பகுதியை மீட்பதற்காக ஈராக் விமானப்படையுடன், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையும் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. அவ்வகையில் ஈராக்கின் மேற்கு பகுதியில் சிரியா எல்லையை ஒட்டியுள்ள காயிம் நகர் மீது நேற்று அடுத்தடுத்து விமான தாக்குதல் நடத்தப்பட்டது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒரு மசூதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி அப்பகுதியில் வான் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், காயிம் நகரில் உள்ள மார்க்கெட்டில் தவறுதலாக சில குண்டுகள் விழுந்து வெடித்தன. இந்த தாக்குதலில் 12 பெண்கள், 19 குழந்தைகள் உள்பட 55 பேர் பலியாகி இருப்பதாக காயிம் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், 8 தீவிரவாதிகளின் உடல்கள் மருத்துவமனைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஈராக் விமானப்படை இந்த தாக்குதலை நடத்தி இனப்படுகொலை செய்ததாகவும், இதுகுறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அன்பர் மாகாண கவுன்சில் செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More