இலங்கை உடற்கட்டு சம்மேளத்தினால் நடாத்தபட்ட 2016 ஆம் ஆண்டு மிஸ்டர் ஸ்ரீலங்கா ஆணழகர் போட்டியில் புசல்லாவ இந்து தேசிய கல்லூரியின் மாணவன் மாதவன் இராஜகுமாரன் 2016 ஆம் ஆண்டிற்கான ஜூனியர் மிஸ்டர் ஸ்ரீலங்காவாக தெரிவாகியுள்ளார்.
இந்த போட்டியில் சுமார் 35 போட்டியாளர்கள் பங்குபற்றினர்.
மலைய மாணவர்கள் சாதிக்க பிறந்தவர்கள் என்பது யாபருக்கும் தெரியும். தற்போதும் அன்மைக்காலமாகவும் இவர்கள் அனைத்து துறைகளிலும் சாதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருந்தும் இவர்களுக்கான சந்தர்பங்களும். உதவிகளும்¸ வாய்ப்புக்களும் கிடைக்காததினால் பல சாதனையாளர்கள் தோட்டங்களில் முடங்கி கிடக்கின்றனர்.
இவை கிடைத்தால் நாங்கள் சலைத்தவர்கள் அல்ல சாதிக்க பிறந்தவர்கள் என்று பறைசாட்டுகின்றார்.
நுவரெலியா மாவட்டம், கொத்மலை¸ லபுக்கல்ல தோட்டம்¸ கொண்டகலைப் பிரிவை சேர்ந்த தோட்ட தொழிலாளிகளான திரு திருமதி மாதவன் பரமேஸ்வரி தம்பதிகளின் புதல்வன் மாதவன் ராஜகுமாரன்.
இந்த மாதவன் ராஜ்குமாரன் முதலாம் இடத்தை பெற்று தேசிய ரிதியில் வெற்றி பெற்று சாதனையை மீண்டும் ஒரு சாதனையை நிலை நாட்டியுள்ளார்.
2015 ஆம் ஆண்டும் இதே சாதனையை நிலை நாட்டியமை குறிப்படதக்கது.
இந்த சாதனை மலைகத்திற்கு பெருமையை சேர்த்துள்ளது. இவர் தற்போது புசல்லாவ இந்து தேசிய கல்லூரியில் உயர்தர (12) உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயின்ற வருகின்றா