இலங்கையின் களுத்துறை சிறைச்சாலையில் இருந்து சில கைதிகளை வழக்கு விசாரணைக்காக மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு ஒரு பேருந்தில் அழைத்துச் சென்றனர். அதில், முக்கிய வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் இருந்தனர். கோர்ட்டுக்கு செல்லும் வழியில் அடையாளம் தெரியாத நபர்கள் பேருந்தின் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும், 4 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இறந்தவர்களில் பிரபல நிழலுலக தாதா அருணா தமித் உதயங்கா என்கிற சமயன் மற்றும் இரண்டு சிறைத்துறை அதிகாரிகளும் உள்ளடக்கம்.
நகாஹா சந்திப்பில் இந்த தாக்குதல் நடந்ததாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.