Monday, May 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வெளிநாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தோனேசிய தொழிலாளர்கள் மரணம்

வெளிநாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தோனேசிய தொழிலாளர்கள் மரணம்

1 minutes read

2018ம் ஆண்டில் இந்தோனேசியாவின் தென் மாகாண பகுதியில் இருந்து (கிழக்கு நுசா டென்கரா) வெளிநாடுகளுக்கு சென்ற 105 தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளனர்.

இடம்பெயர்ந்த பெரும்பாலான தொழிலாளர்கள் மலேசியாவில் பணியாற்றும் பொழுது மரணமடைந்துள்ளதாக இந்தோனேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு சேவை மையத்தின் தலைவர் குப்பங் சில்வா கூறியுள்ளார்.

மலேசியாவை பொறுத்தமட்டில் 102 பேரும், சிங்கப்பூரில் 2 பேரும், தென் ஆப்பிரிக்காவில் ஒரு தொழிலாளியும் இறந்துள்ளனர். இந்த தொழிலாளர்களில் மூவர் மட்டுமே சட்டரீதியாக சென்றுள்ளனர். மற்ற 102 பேரும் முறையற்ற வகையில் அல்லது சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர், என சில்வா தெரிவித்திருக்கிறார்.

2018ல் மரணமடைந்ததாக கூறப்படும் 105 தொழிலாளர்களில் 71 பேர் ஆண்கள், 34 பேர் பெண்களாவர். இவர்கள் மோசமான உடல்நிலை காரணமாகவும் விபத்தின் காரணமாகவும் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழலில், மனித கடத்தலுக்கு எதிரான வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More