Thursday, May 9, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கொலம்பியத் தலைநகரில் கார்க்குண்டுத் தாக்குதல் 21 பேர் கொலை

கொலம்பியத் தலைநகரில் கார்க்குண்டுத் தாக்குதல் 21 பேர் கொலை

1 minutes read

கொலம்பியாவின் தலைநகர் பொகோடாவில் இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பொலிஸ் அகாடமி ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் 54 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

காரின் சாரதி 57 வயதான நபர் என அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், அவரும் கொல்லப்பட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை.

இந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி, இவான் டூக் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More