Saturday, May 11, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 2020ல் புரட்சிகர மாற்றம் நிகழ வேண்டும்

2020ல் புரட்சிகர மாற்றம் நிகழ வேண்டும்

1 minutes read

இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் 35 ஆவது பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

2020 ஆம் ஆண்டு நாட்டைப் பொறுப்பேற்கவுள்ளவர் எதிர்கொள்ளவுள்ள சவால்கள் தொடர்பில் அவர் கூறியபோது, எத்தகைய வீரன் ஒருவன் 2020 ஆம் ஆண்டில் நாட்டைப் பொறுப்பேற்றாலும் மிகப்பெரிய புரட்சிகரமான மாற்றத்தை நாட்டில் செய்ய நேரிடும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எனினும் அவ்வாறான புரட்சிகர மாற்றம் ஒன்று இடம்பெறாவிட்டால் நாடு இன்னும் 2 அல்லது 3 வருடங்களில் மிகவும் மோசமான நிலைக்கு செல்லும் எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

முக்கிய சில திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் காணப்படுகின்ற ஊழல் முறைகேடுகள், மோசடிகள் காரணமாக வரவு செலவு பற்றாக்குறையை ஈடு செய்வது கடினமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மோசடிப் பணத்தை மீளப் பெறுவதற்காக எந்தவொரு அரசாங்கமும் அந்நிறுவனங்கள் மீது கை வைப்பதில்லை என கூறிய ஜனாதிபதி, அந்நிறுவனங்கள் இரண்டு நாட்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் முழு நாடும் சீர்குலையும் என தெரிவித்தார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More