திருகோணமலை கடற்படை முகாமில் விசாரணைகளை நடத்துவதற்கு, குற்ற விசாரணைப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
2008-2009 காலப்பகுதியில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 11 பேர் தொடர்பாக தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அதற்கமையவே திருகோணமலை கடற்படை முகாமில் விசாரணைகளை நடத்துவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பில் கடத்திச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்ட 11 பேரும் இறுதியாக தடுத்து வைக்கப்பட்ட திருகோணமலை கடற்படை முகாமில், சட்ட மருத்துவ அதிகாரிகள், பொது சுகாதார ஆய்வாளர்கள், குற்ற விசாரணை அதிகாரிகள் என மூன்று குழுக்களை ஆய்வு நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் இந்த ஆய்வை நடத்தி, இந்தக் குழுக்கள் குற்ற விசாரணைப் பிரிவிடம் அறிக்கைகளை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.