அவுஸ்ரேலியாவனது காட்டுத் தீ அனர்த்தத்தை சந்தித்து வருகின்ற நிலையில் நியூ சௌத் வேல்ஸில் இன்று (சனிக்கிழமை) காலை நிலைவரப்படி பல இடங்களில் காடு மற்றும் புற்களில் தீ ஏற்பட்டதாக என்.எஸ்.டபிள்யூ என்ற கிராமப்புற தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தீயணைப்புப் படை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதுடன் பாதுகாப்பு அறிவுறுத்தலையும் விடுத்துள்ளனர்.
இதன்படி அடுத்த வாரம் வெப்பமான வானிலை அங்கு எதிர்பார்க்கப்படுகிறது.
பல தேசிய பூங்காக்கள் தீ அச்சுறுத்தலால் மூடப்படுவதாக NSW சுற்றுச்சூழல் மற்றும் பாரம்பரிய அலுவலகம் ருவிற்றரில் தெரிவித்துள்ளது.
இதே வேளை கடந்த ஒரு வாரத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 300 இற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து அழிவடைந்துள்ளன.