Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஈரானிலும் தனது தாண்டவத்தை ஆடிய கொரோனா.

ஈரானிலும் தனது தாண்டவத்தை ஆடிய கொரோனா.

1 minutes read

ஈரானில் கொரானா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு சுகாதாரத்துறை செயலாளர், கொரானாவுக்கு 593 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் கொரானா தாக்குதலில் சீனாவுக்கு வெளியே அதிகபட்ச பலி எண்ணிக்கையைக் கொண்ட நாடாக ஈரான் உள்ளது.

இந்நிலையில் ஈரான் நாட்டுக்குச் சென்று திரும்பிய அனைவரும் தாங்களே மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், மறுப்பவர்கள் மீது கைது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பஹ்ரைன் எச்சரித்துள்ளது.

இதனிடையே கடந்த வியாழக்கிழமை மெக்கா, மெதினா ஆகிய புனிதத் தலங்களுகளுக்கு பிற வெளிநாட்டுப் பயணிகளின் வருகையை தடைசெய்துள்ள சவூதி அரேபியா, வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளான பஹ்ரெய்ன், குவைத், ஓமன், கட்டார், ஐக்கிய அரபு அமீரம் ஆகிய நாடுகளின் பயணிகளுக்கும் தடைவிதிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More