கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஈரான் நாட்டுடனான எல்லையை ஈராக் அரசு மூடி உள்ளது.சீனாவுக்கு அடுத்தப்படியாக ஈரான் நாட்டில் கொரானா வைரஸ் தாக்கமானது அதிக அளவில் காணப்படுகின்றது. இந்நிலையில், கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரான் நாட்டுடனான எல்லையை ஈராக் அரசு மூடி உள்ளது.
எல்லைப் பகுதியில் சுகாதார பணியாளர்கள் நோய் தடுப்பு மருந்துகளை தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஈராக் அரசின் இந்த நடவடிக்கையால், எல்லையோர பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.