கொரானா பாதித்த நோயாளிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில், ரோபா ஒன்றை சீனாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால், அவர்களுக்கு உதவி புரியும் வகையில் இந்த ரோபாவை உருவாக்கி உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ரோபா மூலம், மருத்துவர் நோயாளியை நெருங்காமலேயே, மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். தற்போது இரண்டு ரோபோக்களை உருவாக்கி உள்ள இந்த குழுவினர், அவற்றை சோதனை முறையில் மருத்துவமனைகளில் பயன்படுத்தி வருகின்றனர்.
இது போன்ற ஒரு ரோபோவை தயாரிக்க இந்திய மதிப்பில் 54 லட்சம் ரூபாய் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.